பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையில் அறுவடை 2025 தொடக்க விழா அழைப்பிதழ் வழங்கல்



பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் மாதாந்திர செயற்குழு கூட்டம் இன்று தலைவர் திரு. வெங்கடேஷ் அவர்கள் தலைமையில் சபை அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உடுமலை GVG கலையரங்கத்தில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சி தொடர்பான துவக்க விழா அழைப்பிதழை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நோக்கம், விவசாய வளர்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கிராமிய மேம்பாடு குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.
நிகழ்வில் தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உடுமலை தமிழிசை சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
🌾 விவசாயம் தழைக்க! விவசாயி வாழ்க்கை சிறக்க!