அழைப்பிதழ் வழங்கும் செயல்பாடுகள்

அறுவடை 2025
16
Apr

அறுவடை 2025 – அழைப்பிதழ் வழங்கும் செயல்பாடுகள்


அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல கல்வி நிறுவனங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் மற்றும் வேலைமுறை அறிவிப்புகள் (Workshop Seminar Notices) நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கல்:

  • Knowledge Institute of Technology, Salem
    இங்கு 15 அழைப்பிதழ்கள் மற்றும் 100 வேலைமுறை அறிவிப்புகள் வழங்கப்பட்டன.
  • Excel Engineering College, Komarapalayam
    இங்கு Principal அவர்களுக்கு 10 அழைப்பிதழ்கள் மற்றும் 100 வேலைமுறை அறிவிப்புகள் வழங்கப்பட்டன.
  • Sengunthar Engineering College, Tiruchengode
    இங்கு Dean அவர்களுக்கு அறுவடை கண்காட்சி அழைப்பிதழும் வேலைமுறை அறிவிப்பும் வழங்கப்பட்டது.
  • Sengunthar Engineering College, Perundurai Campus
    இங்கு Correspondent மற்றும் Principal அவர்களுக்கு அழைப்பிதழ்கள் மற்றும் வேலைமுறை அறிவிப்புகள் வழங்கப்பட்டன.

இத்துடன், பல்வேறு கல்வி நிறுவனங்களை நேரடியாக சென்று அழைத்தும், மாணவர்களையும் பேராசிரியர்களையும் விழாவில் கலந்துகொள்ள அழைப்பதும் சிறப்பாக நடைபெற்றது.

கிராம விவசாயிகளுக்கு நேரடி அழைப்பிதழ் வழங்கல்:

இராகல்பாவி கிராமம்
இங்கு முழுநேர விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து விவசாயிகளுக்கும், உடுமலை தமிழிசைச் சங்கம் சார்பில் அறுவடை 2025 விழாவுக்கான அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டன.

உடுமலை தமிழிசைச் சங்க செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் கண்ணபிரான் அவர்கள் நேரில் சென்று விவசாயிகளுடன் உரையாடி, விழாவின் முக்கியத்துவத்தையும், அதன் வாயிலாக கிடைக்கக்கூடிய பயன்களையும் விளக்கினார்.
மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விவசாயிகள் அனைவரும் ஊக்குவிக்கப்பட்டனர்.

விவசாயிகள் அனைவரும் விழாவை மகிழ்ச்சியுடன் வரவேற்று, விழாவில் உற்சாகமாக கலந்துகொள்வதாக உறுதியளித்தனர்.


🌾 அறுவடை 2025 நிகழ்வு, விவசாயம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஓர் அமைப்பான தருணமாக அமையும்.
அனைவரும் இதில் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பிக்க வரவேற்கிறோம்!


Leave a Reply